×

அம்பத்தூர் நீதிமன்றத்தில் காவலாளி தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

அம்பத்தூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அக்ரகாரம் பழைய தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (58). இவர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் காவலாளியாக பணியாற்றினார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் கோவிந்தசாமி இரவு பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று மதியம் நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுமக்கள் சிலர் சென்றபோது அங்குள்ள மரத்தில் கோவிந்தசாமி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் எஸ்.ஐ ஜெகநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் கோவிந்தசாமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘’எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் கடன் ஏற்பட்டது. கடன் தொல்லை அதிகமாக உள்ளதால் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால்நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது உடலை மனைவி, மகனிடம் ஒப்படைக்கவேண்டும். எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்கு முதல்வர் நல்ல வேலை கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட கோவிந்தசாமிக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்….

The post அம்பத்தூர் நீதிமன்றத்தில் காவலாளி தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Ambattur court ,Ampathur ,Govindaswamy ,Old Street, ,Gadpadi Agrakaram, Vellore District ,Ambattur ,court ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் அனைத்து பேருந்து...