சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில், கட்சியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வரும் 4.11.2023 (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தஞ்சை மாநகரில் நடைபெற உள்ள 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தஞ்சையில் 4ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் எடப்பாடி பேசுகிறார் appeared first on Dinakaran.
