*சந்திராயன் மலர் அலங்காரம் அகற்றம்
ஊட்டி :ஊட்டி தாவரவியல் பூங்காவில் மேரிகோல்டு மலர்கள் அழுகியதால், புல் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த சந்திராயன் மற்றும் ஸ்மைலி மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பொதுவாக, முதல் மற்றும் இரண்டாம் சீசன் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது இரண்டாம் சீசன் என்பதால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அனைத்து செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. ேமலும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ெதாட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர்கள் பூத்துள்ளன. இந்த தொட்டிகளை கொண்டு பூங்காவில் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மாடங்களில் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், ஊட்டியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மேரிகோல்டு, டேலியா உட்பட பல்வேறு மலர் செடிகள் அழுகின.குறிப்பாக, புல் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த சந்திராயன் மற்றும் ஸ்மைலி போன்ற மலர் அலங்காரங்களில் வைக்கப்பட்டிருந்த மேரிகோல்டு மலர்கள் அழுகின. குறிப்பாக, ேமரிேகால்டு மலர்கள் அனைத்தும் அழுகி உதிர்ந்தன.
இதனால், மலர் அலங்காரங்கள் அலங்கோலமாக காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த மலர் செடிகள் அகற்றப்பட்டன. அதேசமயம், மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளன. இதனை ஆயுத பூஜை விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லலாம்.
The post மழையால் மேரிகோல்டு மலர்கள் அழுகின appeared first on Dinakaran.
