காரைக்குடி: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் புனித்சாய்(5). இவர் ஒன்று முதல் 20 வரையிலான எண் கணித வாய்ப்பட்டினை 4 நிமிடங்களில் கூறி வியப்பில் ஆழ்த்தி வருகிறார். மூன்று இலக்க பெருக்கலை 20 செகண்டில் கூறுகிறார். தவிர இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் வீரச் செயல்கள், அவர்களின் வாழ்க்கை வரலாறு. முக்கிய நிகழ்வுகள், ஆண்டுகள் என அனைத்தையும் கேட்டவுடன் கூறுகிறார். மாநிலம், மாவட்டம், யூனியன் பிரதேசங்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கூறி விடுகிறார். சாதனை மாணவரை பாராட்டி பரிசு வழங்கி முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா பேசுகையில், வெற்றி பெறுவது என்பது அனைவராலும் முடியும். இலக்கை நிர்ணயித்துக்கு கொண்டு விடாமுயற்சியாக அதனை அடைய வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்தால் அனைவரும் வெற்றியாளர்கள் தான். மாணவர் புனித்சாய் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்த தலைமையாசிரியர் வடிவாம்பாள், அவரது பெற்றோர் மூர்த்தி, தாயார் ரம்யா ஆகியோரை பாராட்டுகிறேன். கற்பித்தலின் நோக்கம் பாடம் நடத்துவது மட்டும் அல்ல. அந்த பாடத்தை தாண்டி பிற திறமைகளை வளர்ப்பதே ஆசிரியர்களின் கடமை. தன்னிடம் உள்ள மாணவர்களை சிறந்த அறிவு உள்ளவர்களாக, சிந்திக்க கூடியவர்களாக, கோபம் போன்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கூடியவர்களாக உருவாக்க வேண்டும் என்றார்.
The post ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் சாதனை சிறுவனுக்கு பாராட்டு appeared first on Dinakaran.