×

பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் குற்றவாளிகள்: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சவுமியா விஸ்வநாதன் என்ற பெண் பத்திரிக்கையாளர் 2008 செப்.30-ல் பணியில் இருந்து வீடு திரும்பிய போது சுட்டுக் கொலை செய்யப்பாட்டார். இந்த வழக்கில் ரவி கபூர், அமித் சுக்லா, அஜய் குமார், பல்ஜீத் மாலிக் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சவுமியா விஸ்வநாதனிடமிருந்து பணம், நகையை கொள்ளையடிக்கும் நோக்கில் கொல்லப்பட்டதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் குற்றவாளிகள்: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Soumya Viswanathan ,Delhi court ,Delhi ,Soumya Viswanathan.… ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...