×

சேலத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கிளை செயலாளர் விஜய் ஆனந்த் துவக்கி வைத்தார். சிஐடியு நிர்வாகி வெங்கடபதி முன்னிலை வகித்தார். இதில், மாநில செயலாளர் பிரதீப், மாநில குழு உறுப்பினர் சௌந்தரராமன், மாநில துணை பொது செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான சட்டத்தை பாதுகாத்திட வேண்டும், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலையை குறைத்து ஜிஸ்டி-யை அகற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில், நிர்வாகிகள் பாலமுருகன், பிரபாகரன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

The post சேலத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : representatives ,Salem ,Pharmaceutical Sales Representatives Association ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...