×

திமுக சார்பில் அன்னதானம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் சாய்பாபா பக்தர்கள் குழு அறக்கட்டளை சார்பில், குருபூஜை விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் தனபாலன் தலைமை வகித்தார். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். இதில் சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அசோக் குமார் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் காளப்பநாயக்கன்பட்டி திமுக பேரூர் செயலாளர் முருகேசன், பேரூராட்சி மின்கம்பம் பராமரிப்பாளர் சந்திரசேகர், திமுக நிர்வாகிகள் தவமணி, சாக்கரடீஸ், ஆர்க்கடீஸ், அறக்கட்டளை பக்த குழு நிர்வாகிகள் வெங்கடேஷ், அஜித், சிலம்பரசன், உதயசூரியன், சஞ்சய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் அன்னதானம் appeared first on Dinakaran.

Tags : Annadanam ,DMK ,Senthamangalam ,Gurupuja ,Senthamangalam Saibaba Devotee Group Foundation ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை