×

தூத்துக்குடியில் மக்கள் நீதிமன்றம் 101 வழக்குகளில் ₹2.23 கோடிக்கு தீர்வு

தூத்துக்குடி, அக்.17: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் தலைமையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. தூத்துக்குடியில் மாவட்ட நீதிமன்றத்தில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில், நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதில் 660 வங்கி வராக்கடன் வழக்குகளில் 91 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ₹1,27,55,501 ஆகும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 66 வழக்குகளில் 10 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ₹95,93,232 ஆகும். மொத்தம் 726 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 101 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ₹2,23,48,733 ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி (பொறுப்பு) பிஸ்மிதா, முதுநிலை நிர்வாக உதவியாளர் தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் இசக்கியம்மாள் மற்றும் பால் செல்வம் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post தூத்துக்குடியில் மக்கள் நீதிமன்றம் 101 வழக்குகளில் ₹2.23 கோடிக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : People's Court ,Tuticorin ,Thoothukudi ,National Law Commission ,Tamil Nadu State Law Commission ,Tuticorin District ,
× RELATED தூத்துக்குடி தனியார் ஆலையில் திடீர்...