×

குடிபோதையில் பைக் ஓட்டியதை பிடிக்க முயன்ற போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்ப முயன்ற வாலிபர் கைது

கோவை, அக்.15:கோவையில் குடிபோதையில் பைக் ஓட்டியதை பிடிக்க முயன்ற போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்ப முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை ஆவாரம்பாளையம் ரோடு ஜங்ஷனில் சம்பவத்தன்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை மறித்தனர். அப்போது அந்த வாலிபர் மது போதையில் பைக் ஓட்டி வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பைக்கை ஓரமாக நிறுத்த சொன்னபோது, அவர் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். போலீசார் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி விட்டு பைக்கில் வேகமாக செல்ல முயன்றார். போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், பீளமேடு ஜெகநாத நகரை சேர்ந்த உணவு டெலிவரி நிறுவன ஊழியர் கார்த்திக் (30) என்பதும், மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் கார்த்திக் மீது குடிபோதையில் பைக் ஓட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post குடிபோதையில் பைக் ஓட்டியதை பிடிக்க முயன்ற போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்ப முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Waliber ,Goa ,Dinakaraan ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...