×

மதுரையில் வழிப்பறிக்கு முயன்ற 5 பேர் கைது

 

மதுரை, அக். 13: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எஸ்.ஐ. அன்புதாசன் தலைமையிலான போலீசார் எம்.கே.புரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற ஐந்து பேரை அவர்கள் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவர்கள் விருதுநகர், இருஞ்சிறையை அடுத்த குழி ராமச்சந்திரன் (34), மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த பழனிகுமார் (43), பாலகிருஷ்ணன் (50), உசிலம்பட்டியைச் சேர்ந்த வீரசுபாஷ் (33), ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மணிராஜா (40) என்பது தெரியவந்தது. அவ்வழியாக வருபவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றதாக அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மதுரையில் வழிப்பறிக்கு முயன்ற 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Madurai, ,Jaihindpuram Police Station S. I. ,Anbudasan ,M. K. ,Puram ,
× RELATED மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற...