×

மீண்டும் ஆட்சியை பிடிக்க தெலங்கானா முதல்வரின் மனைவி திருப்பதியில் மொட்டையடித்து வேண்டுதல்

திருமலை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மனைவி ஷோபா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்றுமுன்தினம் திருமலை வந்தார். அவர் நேற்று காலை மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த தோமாலை, அர்ச்சனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அர்ச்சகர்கள், அவருக்கு கோயில் பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்து வைத்தனர். இதைதொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தெலங்கானாவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய நிலையில் முதல்வர் கேசிஆர் நலமுடன் இருக்கவும், தேர்தலில் பிஆர்எஸ் கட்சி வெற்றிபெற வேண்டியும் முதல்வரின் மனைவி ஷோபா சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

The post மீண்டும் ஆட்சியை பிடிக்க தெலங்கானா முதல்வரின் மனைவி திருப்பதியில் மொட்டையடித்து வேண்டுதல் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister ,Tirupati ,Tirumala ,Chandrasekhara Rao ,Shoba ,Swami ,Seven Malayan Temple ,
× RELATED தெலங்கானா முதல்வர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை