×

வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு கொள்ளிடம் அருகே வளைவில் திரும்பும்போது பேருந்தில் சிக்கிய வேன் போக்குவரத்து பாதிப்பு

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குடமுருட்டி கிராமத்திலிருந்து கொள்ளிடம் நோக்கி தனியார் பயணிகள் பேருந்து நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது மாங்கனாம்பட்டு என்ற இடத்தில் உள்ள குறுகிய வளைவில் திரும்பும்போது எதிரே வந்த ஒரு வேன் பஸ்சை மாறி செல்ல முற்பட்டபோது பஸ்ஸின் பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு வாகனங்களையும் தனித்தனியாக எடுத்து நிறுத்தினர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இரு வாகனங்கள் சிக்கிக்கொண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொள்ளிடம் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் மாங்கனாம்பட்டு என்ற இடத்தில் உள்ள அபாயகரமான வளைவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

 

The post வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு கொள்ளிடம் அருகே வளைவில் திரும்பும்போது பேருந்தில் சிக்கிய வேன் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kollidham ,Kollidum ,Kodamuruti ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடி பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்