ராஜபாளையம், அக்.10: பாமக மாநில தலைவர் அன்புமணி பிறந்த நாள் மற்றும் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட பாமகவினர் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தென்காசி சாலையில் உள்ள மதுரை ராஜா கடை தெருவில் பாமக கட்சி கொடியை ஏற்றிய நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் காளிராஜ் தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட அமைப்பாளர் மாஸ்டர் மணி, வடக்கு நகர செயலாளர் கண்ணன், தெற்கு நகர செயலாளர் எபினேசர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் இசக்கி நாதன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
The post இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.