×

வேலாயுதம்பாளையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம்

வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் மரவாபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சரஸ்வதி மற்றும் சுகாதார தன்னார்வலர் ஈஸ்வரி மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவ ,மாணவிகளுக்கும் ,வங்கியில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதேபோல் அந்த பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல்வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்யப்பட்டது.

The post வேலாயுதம்பாளையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Vettamangalam Maravapalayam ,Karur ,Dinakaran ,
× RELATED கரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மழை!