×

சின்னசேலம் அருகே குடும்பத்தகராறில் கைவிடப்பட்ட குழந்தையை அரவணைத்த மாணவனுக்கு டிஎஸ்பி பரிசு

சின்னசேலம், அக். 10: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை(38). இவர் பைக் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சின்னதுரை தனது 2 வயது மகனை பைக்கில் உட்கார வைத்து, 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வேதவள்ளி மாரியம்மன் கோயிலில் இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. அந்த குழந்தையை அதே தெருவில் வசிக்கும் கோகுல்(10) சிறுவன் பார்த்துள்ளான். அந்த குழந்தை அழுவதை கண்டு, தன் அரவணைப்பில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்தான்.

தகவலறிந்த சின்னசேலம் சப்இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு வந்து அந்த குழந்தையை தூக்கி செல்ல முயன்றார். அப்போது அந்த குழந்தை தன்னை வைத்திருந்த கோகுலை பிரிய மனமில்லாமல் அழுதது. இதையடுத்து கோகுலுடன் சேர்த்து அந்த குழந்தையை அழைத்து சென்றனர். இந்நிலையில் போலீசார் ஒருபுறமும் குழந்தையை யார் விட்டு சென்றிருப்பார்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்புகளை ஆய்வு செய்து வந்தனர். மேலும் சின்னதுரையின் மனைவி யசோதாவும் தனது குழந்தையை காணவில்லையென்று கணவரிடம் கேட்டபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறுவனின் பெற்றோரும் சின்னசேலத்தில் தேடி வந்தனர். இதைக்கண்ட போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று, அறிவுரை கூறி, பின் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அக்குழந்தையை பாதுகாத்து வைத்திருந்த கோகுலை கள்ளக்குறிச்சி டிஎஸ்பி பாராட்டி பரிசு வழங்கினார்.

The post சின்னசேலம் அருகே குடும்பத்தகராறில் கைவிடப்பட்ட குழந்தையை அரவணைத்த மாணவனுக்கு டிஎஸ்பி பரிசு appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Chinnadurai ,Arakalur ,Thalivasal ,Salem district ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...