×

சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.11ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: அக்.11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காலை 10 மணி முதல் பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.

மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்ட வேண்டும். அதன்படி இம்மாதம் 20ம் தேதிக்குள் சட்டசபையை கூட்ட வேண்டும். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது,

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்ட தொடரில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் சபாநயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம்நடைபெற்றது. இன்று கூடிய கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பவு, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று காவிரி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் மூன்று நாட்கள் சட்டப்பேரவை கூட்ட தொடர் நடைபெறும். நாளை மறுநாள் வரை (அக்.11) சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

The post சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.11ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Appa ,Chennai ,Appavu ,Dinakaran ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...