×

பல்லடம் ஒன்றிய பகுதியில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த 200 பெண்கள்

 

பல்லடம், அக்.9: பல்லடம் அருகேயுள்ள மகாலட்சுமி நகர், மீனாம்பாறை பகுதியை சேர்ந்த அதிமுக மகளிரணியை சேர்ந்த 200 பெண்கள் அக்கட்சியிலிருந்து விலகி மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தனர். பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மகாலட்சுமி நகர் அதிமுக முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் லட்சுமி, வள்ளியம்மாள் தலைமையில் 150 பெண்களும், கரைப்புதூர் ஊராட்சி மீனாம்பாறை பகுதியை சேர்ந்த சிந்து, சாந்தா ஆகியோர் தலைமையில் 50 பெண்களும் ஆக மொத்தம் 200 பெண்கள் அதிமுகவில் இருந்து விலகினர்.

அவர்கள் அனைவரும் பல்லடம் அருகே அருள்புரத்தில் உள்ள பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் திமுகவில் இணைப்பு விழா நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ முன்னிலையில் இணைந்தனர். அனைவரையும், வரவேற்று கழக இரு வண்ண பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் வக்கீல் நந்தினி, பல்லடம் ஒன்றிய கழக செயலாளர்கள் என்.சோமசுந்தரம் (கிழக்கு), எஸ்.கிருஷ்ணமூர்த்தி (மேற்கு), மாநில பிரச்சார குழு அமைப்பாளர் உமா மகேஸ்வரி, பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலைச்செல்வி, ஒன்றிய அவை தலைவர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதியம் விருந்து வழங்கப்பட்டது.

The post பல்லடம் ஒன்றிய பகுதியில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த 200 பெண்கள் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DMK ,Palladam ,Makalirani ,Mahalakshmi Nagar, Meenambara ,Dinakaran ,
× RELATED புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு...