×

கொலை வழக்கில் 7 மாதமாக தலைமறைவான பிரபல ரவுடி டேனியல் துப்பாக்கி முனையில் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

 

சென்னை: முகப்பேர் பாடி குப்பத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி டேனியல் (29). இவர், 2019 ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த அழகு முருகனை வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக, ஜெ.ஜெ.நகர் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலையான ரவுடி டேனியல் இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான அவரை கைது செய்ய பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, தொடர்ந்து 7 மாதமாக தலைமறைவாக சுற்றி வந்தார். இந்நிலையில், ரவுடி டேனியல் கடலூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன் மற்றும் ஜெ.ஜெ. நகர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்த அவர், அங்கிருந்து தப்ப முயன்றார். அப்போது தனிப்படையினர் துப்பாக்கி முனையில் அவரை கைது செய்து, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், அவர் காஞ்சிபுரத்தில் என்கவுன்டரில் சுடப்பட்ட பிரபல ரவுடி விஷ்வாவின் நெருங்கிய கூட்டாளி என்பதும், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் 2 கொலை மற்றும் கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் அவர் மீது, நிலுவையில் உள்ளதும், 2021ம் ஆண்டில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்தன் என்பவரின் வெளிநாட்டு சொகுசு காரை தீ வைத்து எரித்த வழக்கு, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, ரவுடி டேனியலை ஜெ.ஜெ.நகர் போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கொலை வழக்கில் 7 மாதமாக தலைமறைவான பிரபல ரவுடி டேனியல் துப்பாக்கி முனையில் கைது: தனிப்படை போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Daniel ,CHENNAI ,Rowdy Daniel ,Mukappher Badi Kuppa ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்