×

ஜெயங்கொண்டம் அருகே கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற இருவர் கைது

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்ட பகுதியில் அரசியல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியில் வசிக்கும் கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி மகன் அறிவழகன் (44). இவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 463 பாக்கெட்டுகளை வைத்திருந்த தகவல் அறிந்த சப் இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் இதனை பறிமுதல் செய்து அறிவழகனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பகுத்தறிவு நகரில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் மருதமுத்து மகன் பாஸ்கர் (55) என்பவர் தனது மளிகை கடையில் வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 90 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் மேலும் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Jayangondam ,Jayangonda ,Jeyangondam… ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே வயலில் இறந்து கிடந்த மயில்