- பள்ளிபாளையம், வெள்ளித்திருப்பூர்
- அந்தியூர்
- பள்ளிபாளையம்,
- செம்புலிச்சம் பாளையம்
- அந்தியூர், ஈரோடு மாவட்டம்
- தின மலர்
அந்தியூர், அக்.8: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம், செம்புலிச்சாம் பாளையம் பகுதிகளில் முழுநேர ரேஷன் கடைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அந்தியூர் வெங்கடாசலம் எம்எல்ஏ நேற்று டிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், சர்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார். இதில் மாவட்ட பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் மாதேஸ்வரன், கூட்டுறவு துறை அதிகாரிகள் பிரபு, வனிதாமணி, சண்முகம், ஸ்ரீ சுதா மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பவானி: அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளிதிருப்பூர் ஊராட்சியில் முழுநேர நியாய விலைக்கடையை எம்எல்ஏ வெங்கடாசலம் திறந்து வைத்தார். அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மகராசு, மாவட்ட பிரதிநிதிகள் வீரராகவன், சந்திரன், ஈரோடு மாவட்ட பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் மாதேஸ்வரன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பிரபு, வனிதாமணி, சண்முகம், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் கண்ணுச்சாமி, நிர்வாகிகள் ராஜூ அனந்த், குமார், ராமசாமி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பள்ளிபாளையம், வெள்ளிதிருப்பூரில் புதிய ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.