×

வெற்றி பெற்ற போலீசாரை அழைத்து எஸ்.பி., பாராட்டு

பெரம்பலூர்,அக்.8: பெரம்பலூரில் நடந்த அறிஞர் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று பரிசுகளை வென்ற போலீசாரை அழைத்து எஸ்பி ஷ்யாம்ளா தேவி பாராட்டு தெரிவித்தார். பெரம்பலூரில் நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்த மாரத்தான் விளையாட்டு போட்டியில் 25வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் பிரிவில் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப் படையைச்சேர்ந்த காவலர் மகேஷ்வரன் முதலிடத்தையும், முதல்நிலைக் காவலர் ரமேஷ் 4ம் இடத்தையும், காவலர் கதிரவன் 6ம் இடத்தையும், முதல்நிலைக் காவலர் மாது 8ம் இடத்தையும், காவலர் பஷீர் 10ம் இடத்தையும் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில் பெண் காவலர் அனுசியா முதலிடத்தையும், பெண் காவலர் திலகவதி 3ம் இடத்தையும், பெண் காவலர் சிவரஞ்சனி 4ம் இடத்தையும், பெண் காவலர் சித்ரா 6ம் இடத்தையும், 25வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் பெண் காவலர் கலைமதி 5ம் இடத்தையும் பிடித்தனர். போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து காவலர்களையும் பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளா தேவி அழைத்துப் பாராட்டியதுடன் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

The post வெற்றி பெற்ற போலீசாரை அழைத்து எஸ்.பி., பாராட்டு appeared first on Dinakaran.

Tags : SP ,Perambalur ,Shyamla ,Scholar Anna Nedundura marathon ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை