திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் குளத்தில் மீன்பிடிப்பில் ஈடுபட்டபோது, ஐம்பொன் நடராஜர் சிலை வலையில் சிக்கியது. இந்த சிலை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம். மழை இல்லாததால் குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது. இதனால் மீன் பிடிக்க குத்தகைக்கு எடுத்தவர்கள் குளத்தில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மீன்பிடிப்பில் ஈடுபட்டபோது வலையில் அரை அடி உயர ஐம்பொன் நடராஜர் சிலை சிக்கியது. இதுகுறித்து திருவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் மூலம் வருவாய்த்துறை ஆய்வாளர் மலர் பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post ஆண்டாள் கோயில் குளத்தில் ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.