×

சமயபுரம் அருகே தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

 

சமயபுரம், அக்.6: சமயபுரம் அருகே கொணலையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமயபுரம் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொணலை மெயின்ரோடு பகுதியைச் சேர்த்தவர் வசந்தராஜ் மகன் வசந்தகுமார் (22). இவர் இருங்களூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வசந்தகுமார் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தந்தை வசந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post சமயபுரம் அருகே தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Konalai ,Dinakaran ,
× RELATED அரசன் ஏரியில் பெண் சடலம் மீட்பு