×

வானூர் அருகே விஷம் குடித்து மனைவி சாவு

வானூர், அக். 6: வானூர் தாலுகா புளிச்சப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(33), இவருடைய மனைவி கல்பனா(28). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கல்பனா கடந்த மாதம் 3ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு மயக்கமடைந்தார். அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே கல்பனாவின் தாயார் தனலட்சுமி, தனது மகளை சுரேஷ் கொடுமைப்படுத்தியதாக வானூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கணவன் சுரேஷ் மீது வழக்குபதிவு செய்து கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வந்த கல்பனா கடந்த 2ம் தேதி இறந்தார். இந்நிலையில் புகார் அளித்த கல்பனாவின் தாயார் தனலட்சுமி தற்போது தனது மகளின் உடலை அடக்கம் செய்ய சிறையில் இருக்கும் மருமகன் சுரேஷ் வரவேண்டும். நான் ஏற்கனவே இருளர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கூறியதன்பேரில் தவறுதலாக புகார் கொடுத்துவிட்டேன். மருமகன் மீது எந்தவித பிரச்னையும் கிடையாது என்று கூறி நேற்று கோட்டக்குப்பம் டி.எஸ்.பி சுனிலை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

ஏற்கனவே மருமகன் குறித்து தனலட்சுமி கொடுத்த புகார் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது அந்த வழக்கை மாற்றகோரி தனலட்சுமி மீண்டும் புதிய புகார் கொடுத்துள்ளதால், போலீசார் மேல்நடவடிக்கை எடுக்கமுடியாமல் திணறிவருகின்றனர். இதனால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் 4 நாட்களாக தாமதம் ஏற்பட்டு வருகிறது.

The post வானூர் அருகே விஷம் குடித்து மனைவி சாவு appeared first on Dinakaran.

Tags : Vanur Vanur ,Suresh ,Kalpana ,Pulichappallam ,Vanur taluk ,Vanur ,
× RELATED 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற...