×

ரூ.1 லட்சம் லஞ்சம் தாசில்தார் கைது

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக இருப்பவர் தென்னரசு. இவரிடம் சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூரை சேர்ந்த கருப்பையா, தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தர கேட்டுள்ளார். அவர், இதில் பிரச்னை உள்ளதால் பட்டா மாறுதலுக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டு, முதல் தவணையாக ரூ.1 லட்சத்தை தருமாறு கூறியுள்ளார். இதுபற்றி கருப்பையா, ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, கருப்பையாவிடம் நேற்று கொடுத்து அனுப்பினர். அதை கருப்பையாவிடம் இருந்து தாசில்தார் தென்னரசு வாங்கியபோது, மறைந்திருந்த போலீசார், தாசில்தார் தென்னரசுவை கைது செய்தனர்.

The post ரூ.1 லட்சம் லஞ்சம் தாசில்தார் கைது appeared first on Dinakaran.

Tags : Thasildar ,R. S. Mangalam ,Ramanathapuram District ,R. S. Mankalam Taluka ,Tasiltar, South Africa ,Shivaganga District ,Amravathiputur ,Thazildar ,
× RELATED கலெக்டர் ஆவது லட்சியம்; ராமநாதபுரம்...