×

பெண் தலையாரியிடம் நகை பறிப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே நாராயணபுரத்தில் பெண் தலையாரியை வீடு புகுந்து தாக்கி தங்க நகை மற்றும் செல்போனை பறித்துச் சென்ற 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்னர். விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள்(37). செங்குன்றாபுரத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் நுழைந்த சிலர் செங்கலால் தாக்கியதோடு, கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது இதுகுறித்து, பாண்டியம்மாள் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார், சுப்பையா, காளியம்மாள், அழகேஸ்வரி, அழகர்சாமி, வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post பெண் தலையாரியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Narayanapuram ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...