×

சாத்தான்குளம் அருகே இளம்பெண் மாயம்

சாத்தான்குளம், அக். 5: சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், வெளியூரில் பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வ பவளக்கொடி(26). இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று தம்பதியினர் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களிடையே குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2ம்தேதி செல்வ பவளக்கொடி, வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சந்திரசேகர், சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

The post சாத்தான்குளம் அருகே இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Chandrasekhar ,Nochikulam ,Chatankulam ,
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது