கிருஷ்ணகிரி, அக். 5: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை எஸ்ஐ கண்ணன் மற்றும் போலீசார், மஸ்தி பேரிகை செல்லும் சாலையில் உள்ள செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 1.250 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த சூளகிரி அடுத்த காருபள்ளா பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (39), பட்டா குருபரப்பள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் (38) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கார் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post கஞ்சா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.