×

காய்ச்சலுக்காக சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசிக தலைவர் திருமாவளவன் டிஸ்சார்ஜ்!

சென்னை: காய்ச்சலுக்காக சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திடீர் காய்ச்சலின் காரணமாக சில நாட்கள் அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன் காரணமாக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் வருகின்ற 30ம் தேதி வரை அவரை சந்திக்க நேரில் வர வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருமாவளவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று சிகிச்சை முடிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வீடு திரும்பினார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி இரவு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வீடு திரும்பினார். சிறிது நாட்களி வீட்டில் ஓய்வு எடுக்கும் படி திருமாவளவனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post காய்ச்சலுக்காக சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசிக தலைவர் திருமாவளவன் டிஸ்சார்ஜ்! appeared first on Dinakaran.

Tags : Vishik ,Thirumavalavan ,Vadapalani private hospital ,Chennai ,Vishika ,Chennai Vadapalani Private Hospital ,
× RELATED கோயில் திருவிழாவில் சாதி பாகுபாடு;...