×

வெள்ளத்தில் சென்னை தத்தளிக்க முந்தைய ஆட்சியே காரணம்: இயக்குனர் சேரன் கடும் தாக்கு

சென்னை: பலத்த மழை காரணமாக சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கிறது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகள் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்திருக்க, பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தில் சென்னை தத்தளிக்க முந்தைய ஆட்சியே காரணம் என்று இயக்குனரும், நடிகருமான சேரன் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து சேரன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி, சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில். (அதிமுக ஆட்சி).  இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா? இந்த ஃபைல முதல்ல எடுங்க தமிழக முதல்வர் அய்யா. என்று தணியும் இந்த…’ என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்துள்ளார்….

The post வெள்ளத்தில் சென்னை தத்தளிக்க முந்தைய ஆட்சியே காரணம்: இயக்குனர் சேரன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : chennai ,seran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...