×

கடலில் படகு மூழ்கியது 3 பேர் கதி என்ன?

குளச்சல்: குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மீனவர் கே.ஆரோக்கியம்(52),கொட்டில்பாடை சேர்ந்த பயஸ்(54) உள்பட 16 பேர் கடந்த 25ம் தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகை பங்குதாரர் ஆன்றோ ஓட்டினார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் சுமார் 30 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் திடீரென விசைப்படகு ஒரு பக்கமாக சரிந்து கடலில் மூழ்கியது. நிலைமையை உணர்ந்த மீனவர்கள் கடலில் குதித்து மீனவர்கள் உதவியுடன் கரை திரும்பினர். இதில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். கே.ஆரோக்கியம்,ஆன்றோ,பயஸ் ஆகிய 3 மீனவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அவர்களை மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று தேடி வருகின்றனர்.

The post கடலில் படகு மூழ்கியது 3 பேர் கதி என்ன? appeared first on Dinakaran.

Tags : Kumari District ,Chachal Port ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா