×

இரணியல் அருகே பெயிண்டர் சுருண்டு விழுந்து பலி

திங்கள்சந்தை, செப்.29: இரணியல் பூவன்கோடு அருகே செங்கோடி ஒட்டலிவிளையை சேர்ந்தவர் ஸ்டாலின் (53). பெயிண்டர். அவரது மனைவி ஜெயா (49). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ஸ்டாலின் குடும்பத்துடன் நெய்யூரில் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஸ்டாலின் தினவிளையில் வினு என்பவர் வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். மாலை டீ குடித்துவிட்டு இருக்கும்போது திடீரென நெஞ்சு வலியால் கீழே சுருண்டு விழுந்து உள்ளார். உடனே அவருடன் வேலை செய்து கொண்டிருந்த உறவினர் ராபின்ராஜன் உள்பட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்டாலின் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து அவரது மகன் லிபின்சாமுவேல் (21). இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரணியல் அருகே பெயிண்டர் சுருண்டு விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Iranial ,Stalin ,Sengodi Otalivilai ,Iranial Bhuvankodu ,Jaya ,
× RELATED இரணியல் அருகே நள்ளிரவில் குளத்தில் கவிழ்ந்த லாரி