×

வடதமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வடதமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக வடதமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பெருந்துறை, நாமக்கல் 70மிமீமழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் சில இடங்களில் மழை பெய்தது.

இதற்கிடையே, தென்மேற்கு பருவமழை வட தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆந்திர கடலோரப் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 30ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post வடதமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Utamil Nadu ,Chennai ,Uttaramil Nadu ,Nadu Nadu ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?