×

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி நாளை நடக்கிறது!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி நாளை நடக்கிறது! appeared first on Dinakaran.

Tags : India ,Australia ,Dinakaran ,
× RELATED மைக்ரோசாப்ட் மென்பொருள் முடக்கம்...