×

திருப்பூரில் சூதாடிய 8 பேர் கைது

 

திருப்பூர், செப்.26: திருப்பூர், வீரபாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீரபாண்டி அடுத்துள்ள குருமன் குட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தது.

அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாட்டு நடைபெற்று கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த 8 பேரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர்கள் வீரபாண்டியை சேர்ந்த ராம்குமார் (29) உள்ளிட்ட 8 பேர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் சூதாட்டத்தில் வைத்திருந்த ரூ.63 ஆயிரம் பணம் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

The post திருப்பூரில் சூதாடிய 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Veerapandi police station ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...