×

விருதுநகர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு

விருதுநகர், செப்.25: வந்தே பாரத் ரயிலை விருதுநகர் சந்திப்பில் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் பாஜவினர் வரவேற்றனர். திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார். இந்த ரயிலை விருதுநகர் சந்திப்பில் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் பாஜவினர் வரவேற்றனர்.

ரயிலில் வந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஒன்றிய இணை அமைச்சர் முருகன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை பென்டகன் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் அதே ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டார்.நிகழ்வில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், முன்னாள் ராணுவ பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், மகளிர் அணி மாவட்ட தலைவி காளீஸ்வரி, தகவல் தொழில்நுட்ப ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் பிரதீப் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post விருதுநகர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar railway ,Virudhunagar ,BJP ,East District ,President Pentagon ,Pandurangan.… ,Virudhunagar railway station ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...