×

டாஸ்மாக் சேல்ஸ்மேனை தாக்கியவர் மீது குண்டாஸ்

வேடசந்தூர், செப். 25: வேடசந்தூர் அருகே டாஸ்மாக் கடை சேல்ஸ்மேனை தாக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக குஜிலியம்பாறையை சேர்ந்த முருகேசன் (45) சேர்ந்தவர் பணிபுரிந்து வந்தார். இவரிடம் கடந்த செப்.2ம் தேதி ஓசியில் மதுபானம் கேட்டு பெரியகுளத்து பட்டியைச் சேர்ந்த அருண்குமார்(32) என்பவர் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு முற்றவே முருகேசனை அருண்குமார் பீர்பாட்டிலால் தாக்கினார். இதில் காயமடைந்த முருகேசன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் முருகேசன் புகாரின் பேரில் அருண்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அருண்குமாரை குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து டிஎஸ்பி துர்கா தேவி தலைமையிலான வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அருண்குமாரை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

The post டாஸ்மாக் சேல்ஸ்மேனை தாக்கியவர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Vedasandur ,Vedsandur ,Dindigul district ,Dinakaran ,
× RELATED வேடசந்தூர் அருகே மது விற்றவர் கைது