×

துவரை நடவு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தேன்கனிக்கோட்டை, செப்.24: கெலமங்கலம் வட்டாரத்தில் வேளாண் துறை அட்மா திட்டத்தின் கீழ், தேன்கனிக்கோட்டை கிராமத்தில் துவரை நாற்று நடவு குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் கலா தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், துவரை நாற்று நடவு மற்றும் பூ பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டிஏபி தெளிப்பு குறித்து விளக்கினார். வேளாண் உதவி பொறியாளர், துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், உதவி வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன், கலைஞர் அனைத்து கிராம வேளாண் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், இடுபொருட்கள், உபகரணங்கள், பண்ணைக்கருவிகள் குறித்தும் விளக்கினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா, உழவன் செயலியின் அவசியம் குறித்து விளக்கினார். இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post துவரை நடவு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Department ,Kelamangalam ,Dhuari ,Dinakaran ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு