×

உடல் நலம் குன்றியிருந்த ஐகோர்ட் நீதிபதி மரணம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி கைலாஷ் பிரசாத் தியோ (56), கடந்த சில மாதங்களாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். ராஞ்சியில் அமைந்துள்ள மெடிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

நீதித்துறையினரின் மரியாதை முடிந்த உடன் மாலை 4 மணிக்கு அங்கிருந்து ராஞ்சியில் உள்ள முக்திதாமுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீதிபதியின் திடீர் மறைவுக்கு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஜார்கண்ட் முதல்வர் உள்ளிட்ேடார் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post உடல் நலம் குன்றியிருந்த ஐகோர்ட் நீதிபதி மரணம் appeared first on Dinakaran.

Tags : Igourd ,Jharkhand High Court ,Kailash Prasad Deo ,Icourt ,
× RELATED அமலாக்கத்துறை கைதை எதிர்த்து...