×

குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் புதிய மின்மாற்றிகள் திறப்பு

உடன்குடி, செப். 21: குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் புதிய மின்மாற்றிகள் திறக்கப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் கருங்காளியம்மன் கோயில் கீழத்தெரு பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின் பழுது ஏற்பட்டு வந்தது. இதையடுத்து 25கேவி திறனுள்ள மின்மாற்றி ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் துவக்க விழாவிற்கு குலசேகரன்பட்டினம் பஞ். தலைவர் சொர்ணபிரியா துரை தலைமை வகித்து புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இதேபோல் மணப்பாடு புதுகுடியேற்று பகுதியில் மின்னழுத்த குறைபாட்டை சரிசெய்யும் வகையில் புதிய மின்மாற்றி ரூ.4.46 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா, மணப்பாடு பஞ். தலைவர் கிரேன்ஸிட்டா வினோ தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் இளநிலைமின் பொறியாளர்கள் உடன்குடி (கிராமப்புறம்) சூசைராஜ், படுக்கப்பத்து வேலாயுதம், நடுவக்குறிச்சி விஜி, உடன்குடி நகர்ப்புறம் உமா மகேஸ்வரி, களப்பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் புதிய மின்மாற்றிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kulasekaranpatnam, Manapadu ,Udengudi ,Kulasekaranpattinam ,Karungaliyamman ,Manapadu ,Dinakaran ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது