×

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; கொச்சியில் இன்று தொடக்கம்: கேரளா – பெங்களூரு பலப்பரீட்சை

கொச்சி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 10வது சீசன் கொச்சியில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இரவு 8.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி – பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன. ஐஎஸ்எல் தொடரின் முதல் சீசனில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், படிப்படியாக அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு கடந்த ஆண்டு 11 அணிகள் பங்கேற்றன. இந்த ஆண்டு புதிதாக பஞ்சாப் எப்சி 12வது அணியாக இணைந்துள்ளதால், ஆட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டி இருக்கும். 10வது சீசன் இன்று கொச்சியில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி – பெங்களூர் எப்சி அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் தனது முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான பஞ்சாப் எப்சி அணியை எதிர்கொள்கிறது ( செப்.23, கொல்கத்தா). சென்னையின் எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் (செப்.23, மாலை) ஒடிஷா எப்சியுடன் விளையாடும். சென்னையில் முதல் ஆட்டம் அக்.7ம் தேதி இரவு நடைபெறும். இதில் சென்னை அணி, நடப்பு சாம்பியன் மோகன் பகான் எஸ்.ஜி அணியை சந்திக்கிறது.

அத்லெடிகோ டி கொல்கத்தா (ஏடிகே) என்ற பெயரில் அறிமுகமான அணி, இப்போது மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் என்ற பெயரில் களமிறங்குகிறது. முன்னதாக, 2020ல் மோகன் பகான் அணியுடன் இணைந்ததால் ஏடிகே மோகன்பகான் எப்சி என்று பெயர் மாற்றப்பட்டு இருந்தது.

The post ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; கொச்சியில் இன்று தொடக்கம்: கேரளா – பெங்களூரு பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : ISL Football Series ,Kochi ,Kerala ,Bengaluru ,Indian Super League ,ISL ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் விற்பனை: மாடல் அழகி உள்பட 6 பேர் அதிரடி கைது