×

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை, செப். 20: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் அரவிந்த் (18). இவருக்கு அடிக்கடி வலிப்பு வருவதால் 12ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று இதே கிராமத்தில் உள்ள கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அரவிந்த் குளித்துள்ளார். குளித்துவிட்டு மேலே வரும் போது திடீரென வலிப்பு வந்ததால் தவறி கிணற்றி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எலவனாசூர்கோட்டை காவல்நிலைய போலீசார், தியாகதுருகம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் அரவிந்தை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Chellamuthu ,Arvind ,Parinthal ,Dinakaran ,
× RELATED உரிய பாதுகாப்பின்றி எடுத்து...