×

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி கோலாகலம்: மூலவருக்கு 18 படி மெகா சைஸ் கொழுக்கட்டை படையல்

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் சதுர்த்தி விழாவின் 10ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் தங்கக்கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். காலை 10.40 மணியளவில் விநாயகர் தங்க மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் கோயில் குளத்தின் முன்பு எழுந்தருளினர். பின்னர் குளப்படிக்கட்டில் அங்குச தேவருக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடந்தன.

50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர். பின்னர் சிவாச்சாரியார் ஒருவர், அங்குச தேவருடன் குளத்தில் மூன்று முறை மூழ்கி எழ, விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர் திருவீதி உலா நடந்தது. பகல் 1.30 மணியளவில் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட மெகா சைஸ் கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி கோலாகலம்: மூலவருக்கு 18 படி மெகா சைஸ் கொழுக்கட்டை படையல் appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi festival ,Pilliyarpatti ,Kolakalam ,Tiruputhur ,Piliyarpatti Karpakavinayakar temple Chaturthi festival ,Sivagangai district ,
× RELATED படுகர் தினவிழா கோலாகலம்: பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற மக்கள்