×

நோபல் பரிசுதொகை ரூ.8.2கோடியாக அதிகரிப்பு

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு தொகையானது ரூ.8.2கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நோபல் பரிசு பரிசு தொகையானது கடந்த 2012ல் ரூ.7.45கோடியில் இருந்து ரூ.5.9கோடியாக குறைக்கப்பட்டது. 2017ம் ஆண்டில் இது ரூ.5.9 கோடியில் இருந்து ரூ.6.7 கோடியாக உயர்த்தப்பட்டது. 2020ம் ஆண்டில் பரிசு தொகையானது ரூ.7.45 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு தொகை ரூ.8.2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

The post நோபல் பரிசுதொகை ரூ.8.2கோடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Stockholm ,Dinakaran ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது...