×

கலெக்டர் அறிக்கை பெரம்பலூர் வல்லப விநாயகர் கோயில் வருடாபிஷேகம்

பெரம்பலூர், செப். 14: பெரம்பலூர்  வல்லப விநாயகர் மற்றும்  மகா மாரியம்மன் திருக் கோவிலில் 4ம்ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் நகரில் எடத் தெரு எனும் வள்ளளார் தெருவில் உள்ள  வல்லப விநாயகர் மற்றும்  மகா மாரியம்மன் திருக் கோவிலில் 4ம் ஆண்டு வருடாபிஷேகம் நேற்று நடை பெற்றது. இதனையொட்டி நேற்று காலை 10 மணிக்கு உற்சவர், கடைவீதி, எடத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 2 கோயில் மூலவர்களுக்கும் வாசனைத்திரவியங்கள், பழங்கள், இளநீர், பால், தயிர், சந்தன சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பகல் 12.30 மணி அளவில் மங்கள வாத்தியம் முழங்க மகாதீபாராதனை காண் பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் பழனியப்பன், தர்ம ராஜன், புகழேந்தி, முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், கீத்துக் கடை குமார், பூக்கடை சரவணன், மற்றும் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை பகுதிகளைச் சேர்ந்த திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர். வருடாபிஷேக விழா பூஜைகளை கோவில் பூசாரிகள் செய்துவைத்தனர்.

The post கலெக்டர் அறிக்கை பெரம்பலூர் வல்லப விநாயகர் கோயில் வருடாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Perambalur Vallabha Vinayagar Temple ,Perambalur ,Vallabha Vinayagar ,Maha Mariamman Thiruk Temple ,Annual Abhishekam ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா