×

காதல் தோல்வியால் ஐடி ஊழியர் தற்கொலை

புதுச்சேரி, செப். 13: புதுச்சேரி, சாரம், திருமுடி சேதுராமன் நகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் தீபக் (27). பொறியியல் பட்டதாரி. சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவர் தன்னுடன் வேலை செய்த ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தாக தெரிகிறது. இதற்்கு தீபக் பெற்றோர், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே தீபக்கிற்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக தெரிகிறது. இதற்காக அவரிடம் தொடர்ந்து பேசி சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே தீபக் மனமுடைந்ததாக தெரிகிறது. இதனிடையே நேற்று முன்தினம் வீட்டில் தீபக் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் இதை பார்த்த அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post காதல் தோல்வியால் ஐடி ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Thirumudi Sethuraman ,Saram ,Deepak ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி