×

ஆரோவில் பகுதியில் கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

வானூர், செப். 12: ஆரோவில் பகுதியில் கஞ்சா விற்றதாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா, 3 பைக், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பகுதியில் ஆரோவில் காவல்நிலைய போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றதாக 4 பேர் பிடிபட்டனர். அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது புதுவை எல்லைப்பிள்ளைச்சாவடி குமார் மகன் தீபக் (29), ரெட்டியார்பாளையம் தேவா நகர் பெலிக்ஸ் மகன் ஆல்பர்ட்ராஜ் (28), காமராஜ் சாலை நேருநகர் சுந்தர் மகன் வெங்கடேசன் (31), சக்தி நகர் புண்ணியகோடி மகன் மணிகண்டன் என்கிற ராஜேஷ் (32) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா, 3 பைக், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆரோவில் பகுதியில் கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Auroville ,Vanur ,Dinakaran ,
× RELATED கார்கள் மோதல்: 3 பேர் பலி