×

மீனவரை குத்தி கொன்ற 15 வயது சிறுவன் கைது

நாகர்கோவில்: மீனவரை குத்திக் கொன்ற 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி ரட்சகர் தெருவை சேர்ந்தவர் சகாயம் (50). மீன் பிடி தொழிலாளி. குடிபோதையில் அடிக்கடி தெருவில் சண்டை போடுவது வழக்கம். இவரது நடவடிக்கையால் மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 3ம் தேதி, கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் போதையில் இருந்த சகாயம், அந்த வழியாக சென்ற பெண்களை கேலி, கிண்டல் செய்துள்ளார். அங்கு நின்ற சிறுவர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சகாயம், மது பாட்டிலை உடைத்து 15 வயது சிறுவனை தாக்கினார். இதில் அந்த சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

ஆனால் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கன்னியாகுமரி மறக்குடி தெருவில் உள்ள லாட்ஜ் அருகில் சகாயம் மதுபோதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரால் தாக்கப்பட்ட சிறுவன் நண்பர்கள் 2 பேருடன் நின்று கொண்டிருந்தார். ஏற்கனவே தன்னை அடித்ததற்கு பழி தீர்க்கும் வகையில், மூன்று பேரும் சேர்ந்த சகாயத்தை தாக்கினர். பின்னர் சிறுவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது நெஞ்சில் குத்தினார். பாய்ந்த வேகத்தில் கைப்பிடி மட்டும் கழன்றுவிட நெஞ்சில் இருந்து கத்தி வெளியே வரவில்லை. இதில் அவர் அப்படியே மயங்கி விழுந்து உயிரிழந்தார் இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை கைது செய்தனர்.

The post மீனவரை குத்தி கொன்ற 15 வயது சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Kannyakumari ,Ratsakar Street Sahayam ,50 ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...