×

அணைக்காமல் வீசிய சிகரெட்டால் தீப்பற்றி முதியவர் கருகி பலி

கிருஷ்ணகிரி, செப்.9: பர்கூர் சிகரலப்பள்ளி அருகே, ஜீவன்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(60). இவர் கடந்த 6ம் தேதி, வீட்டில் கட்டிலில் படுத்திருந்தார். அப்போது சிகரெட் பிடித்துள்ளார். பின்னர், அதை அணைக்காமல் கட்டில் பக்கம் வீசியதில், கட்டில் துணியில் தீப்பற்றி எரிந்தது. இதில் கட்டிலில் படுத்து உறங்கிய கோவிந்தன், பலத்த தீக்காயம் அடைந்தார். உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அணைக்காமல் வீசிய சிகரெட்டால் தீப்பற்றி முதியவர் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Govindan ,Jeevanvattam ,Parkur Sikaralapally ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்