×

பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி

சேலம், செப். 5: சேலம் குகை பெரியார் வளைவு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (53). இவரது கணவர் வனத்துறையில் பணியாற்றி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். 17 வயதில் மகன் இருக்கிறான். இதற்கிடையில் கடந்த 10 ஆண்டுகளாக மேட்டூரைச்சேர்ந்த அறிவழகன் என்பவருடன் மகாலட்சுமி தகாத பழக்கத்தை ஏற்படுத்தி அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு மகாலட்சுமிக்கும் அறிவழகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அறிவழகன் காய்கறி வெட்டும் கத்தியால் மகாலட்சுமியின் கையை வெட்டியதாக கூறப்படுகிறது. ரத்தம் சொட்டிய நிலையில் மகாலட்சுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த தகவலின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அறிவழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் மகாலட்சுமி கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Salem ,Mahalakshmi ,Salem Cave Periyar Bend ,Dinakaran ,
× RELATED டூவீலர் திருடியவர் கைது